
Rohit Sharma becomes first Indian to achieve incredible batting milestone during India vs England 1s (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 111 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 58 பந்துகளில் 76 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனால் ஒரு விக்கெட்கள் கூட இன்றி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த இன்னிங்ஸின் மூலம் ரோஹித் சர்மா பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் இந்திய என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் இதுவரை 250 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.