
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவில் தொடங்குகிறது.
தற்பொழுது நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக் கோப்பை இந்திய அணியில் நான்காவது இடத்திற்கான வீரர் யார்? இரண்டாவது விக்கெட் கீப்பர் யார்? என்பதை கண்டறிவதற்கான மிக முக்கியமான தொடராகும். இந்தத் தொடருக்கு வீரர்கள் தயாராகி வருகின்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான கேள்விகள் பத்திரிகையாளர்களால் முன்வைக்கப்பட்டது.
அப்போதுரோஹித் சர்மாவிடம் பும்ரா பற்றிய கேள்வி எழுப்பிய போது பதில் அளித்த அவர், “பும்ரா அணிக்கு திரும்பும் பொழுது அவர் கொண்டு வரும் அனுபவம் மிகவும் முக்கியமானது. தற்போது அவர் கடுமையான காயத்தில் இருந்து வருகிறார். மேலும் அணி இன்னும் அறிவிக்கப்படாத காரணத்தால் அவர் அயர்லாந்துக்கு செல்வாரா? என்று எனக்குத் தெரியாது.