
Rohit Sharma Explains Why Dinesh Karthik Was Promoted Ahead of Rishabh Pant at Nagpur During 2nd T20 (Image Source: Google)
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக துவங்கியதால் போட்டியின் ஓவரும் தலா 8ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 43* ரன்களும், ஆரோன் பின்ச் 31 ரன்களும் எடுத்தனர்.