
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை வரும் அக்டோபர் 23ஆம் தேதி எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் மதியம் 1.30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியே பெறாமல் இருந்த இந்திய அணி கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதே போல ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுடனான தோல்வி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது. எனவே இந்த முறை அதற்கெல்லாம் பதிலடி கொடுக்க வேண்டும் என ரோஹித் சர்மாவின் தலைமையில் களமிறங்கவுள்ளது. ஆனால் அதில் இந்தியாவுக்கு பெரும் சிக்கல் உள்ளது.
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் சவாலாக உள்ளனர். கடந்தாண்டு ஷாஹீன் அஃப்ரிடியின் பவுலிங்கில் இந்தியாவின் டாப் 3 வீரர்கள் சரிந்தனர். சாம்பியன்ஸ் கோப்பையில் முகமது அமீரிடம் இந்திய வீரர்கள் சொதப்பினர். இதனால் இந்தாண்டு எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.