Advertisement
Advertisement
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 05, 2024 • 10:32 PM

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச முடிவுசெய்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 05, 2024 • 10:32 PM

அதிலும் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பேர், ஜார்ஜ் டக்ரேல் உள்ளிட்ட வீரர்கள் பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.  அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கரேத் டெலானி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

Trending

இதனால் அயர்லாந்து அணியானது 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் சர்மா தனது அரைசதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 26 ரன்களை கடந்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் எனும் பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். 

இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4038 ரன்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 4023 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா மேற்கொண்டு 38 ரன்களைச் சேர்க்கும் நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement