
நடைபெற்று வரும் 16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நான்காவது பலமிக்க அணியாக யார் இருப்பார்கள் என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது!
இதில் டாஸை இழந்த மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்த பொழுது இந்த ரன்கள் சவாலான இலக்காகவே கருதப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு மயங்க் அகர்வால் மற்றும் கிளாஸண் இருவர் மட்டும் சராசரியான பங்களிப்பை தந்திருந்தாலும், ஹைதராபாத் அணி கடைசி இரண்டு ஓவர்களுக்கு 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. ஆனாலும் கையில் இருந்த இரண்டு விக்கட்டுகளையும் இழந்து ஒரு பந்து மீதம் இருக்கையில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
வெற்றிக்குப் பின் பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இங்கு விளையாடியதில் எனக்கு பல இனிமையான நினைவுகள் இருக்கின்றன. மூன்று சீசன்களில் விளையாடி கோப்பையை வென்று இருக்கிறோம். பந்துவீச்சாளர்களை செட்டில் செய்வது எங்களுக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. இதற்கு முன் ஐபிஎல் விளையாடாத ஒரு ஜோடி எங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்களை நாங்கள் பேக் செய்வது அவசியம். அவர்கள் தன் சொந்த திறமையில் வந்திருக்கக் கூடியவர்கள். நான் என் பேட்டிங்கை ரசிக்கிறேன். நான் செய்வதை விரும்புகிறேன்.