
Rohit Sharma MEGA-sixer goes on to Hit little girl on stands, Match resumes after English doctors ta (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கெனிங்டன் ஓவலில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பும்ராவின் அபாரமான பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்தது. 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பும்ரா அபாரமாக பந்துவீசி 7.2 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது பெஸ்ட் பவுலிங்கை பதிவு செய்தார்.