Advertisement

மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்; அணியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மற்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியால் அதிருப்தியடைந்துள்ள முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த ஐபிஎல் சீசனில் அந்த அணியை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan April 04, 2024 • 22:14 PM
மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்; அணியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்; அணியில் இருந்து விலகும் ரோஹித் சர்மா? (Image Source: Google)
Advertisement

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது ஹர்திக் பாண்டியா கேப்டன்சியின் கீழ் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 

முன்னதால் இந்தாண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னரே மும்பை இந்தியன்ஸ் அணியில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. ஏனெனில் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது, தங்கள் அணியின் வெற்றிகரமான கேப்டனும், அணிக்கு 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவறுமான ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கியது. 

Trending


மேலும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை அணியின் புதிய கேப்டனாக அறிவித்தது பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தன. குறிப்பாக மும்பை இந்திய்ன்ஸ் அணியில் உள்ள முக்கிய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பல வீரர்கள் இந்த முடிவினால் அருப்தியடைந்ததுடன், தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி எதிர்ப்பை பதிவுசெய்திருந்தனர். 

இந்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்து வருவது , ரோஹித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அலைக்கழித்தது என பல விஷயங்களால் ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்கள் அதிருப்தியுடன் இருக்கின்றனர். இதனால் ஒவ்வொரு போட்டியின் போதும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்து ரசிகர்கள் சத்தமிட்டு வருகின்றனர். மேலும் அந்த அணியை சமூக வலைதளங்களில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

 

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நடவடிக்கையில் திருப்தியடையாத ரோஹித் சர்மா, அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மும்பை அணி நிர்வாகம் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அணுகுமுறையால் அதிருப்தியில் இருக்கும் ரோஹித் சர்மா, அடுத்த வருடம் நடக்கவிருக்கும் மெகா ஏலத்தில் நிச்சயம் வேறு அணிக்கு செல்லும் முடிவில் உள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முக்கியமான முடிவை எடுத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இன்னும் இரண்டு போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டனாக வாய்ப்பை வழங்க உள்ளதாகவும், அதிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படாத நிலையில் அவரிடமிருந்து கேப்டன்சியை பறித்து மீண்டும் ரோகித் சர்மாவிடமே வழங்கவும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement