Advertisement

விராட் கோலி or ரோஹித் சர்மா யாருடை விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி? - ஷாஹீன் அஃப்ரிடி பதில்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவில் யாருடைய விக்கெட்டை மிகவும் ரசித்தீர்கள் என்ற கேள்விக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி பதிலளித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 03, 2023 • 11:30 AM
விராட் கோலி or ரோஹித் சர்மா யாருடை விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி? - ஷாஹீன் அஃப்ரிடி பதில்!
விராட் கோலி or ரோஹித் சர்மா யாருடை விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி? - ஷாஹீன் அஃப்ரிடி பதில்! (Image Source: Google)
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் தனி ஒரு வீரராக இந்தியாவை கட்டுப்படுத்தி தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார், பாகிஸ்தான் அணியின் இளம் இடதுகை பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி.

இந்த போட்டி மழை அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்றது. மழைக்கான மேகமூட்டம் இருந்த காரணத்தினால் பந்துவீச்சுக்கு வசதியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தார்.

Trending


இந்த நிலையில் முதல் நான்கு ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக சமாளித்து விளையாடியதோடு தேவையான ரன்களையும் கொண்டு வந்தார்கள். இதற்கிடையே மழை வந்து குறுக்கிட்டு ஆட்டம் சிறிது தாமதிக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.

மீண்டும் தொடங்கிய அதே ஓவரில் ஷாஹின் ஷா அஃப்ரிடி ரோஹித் சர்மாவுக்கு இரண்டு பந்துகளை வெளியில் காட்டி, ஒரு பந்தை அழகாக இன் ஸ்விங் செய்து உள்ளே கொண்டு வர, ரோஹித் சர்மா அதற்கு முற்றிலும் ஏமாந்து ஸ்டெம்பை பறிகொடுத்தார்.  அடுத்து வந்த விராட் கோலியும் அஃப்ரிடியின் பந்தை விடுவதா அடிப்பதா என்கின்ற சிறிய குழப்பத்தில் பேட்டை நீட்ட, பந்து இன்சைட் எட்ஜ் எடுத்து ஸ்டெம்ப்பை தகர்த்தது. விராட் கோலி நான்கு ரன்களில் வெளியேறினார்.

இந்த போட்டியில் மழை குறுக்கிடுவதற்கு முன்பாக ஷாகின் ஷா அஃப்ரிடி முதல் இரண்டு ஓவர்களில் ஸ்விங் தேடி பந்தை ஃபுல் லென்த்தில் பேட்ஸ்மேன்களுக்கு வீசிகொண்டு இருந்தார். மழை குறுக்கிட்டு கொஞ்சம் நேரம் கிடைக்க, திரும்பி வந்தவர் பந்தை ஆடுகளத்தை பயன்படுத்தி லென்த்தை கொஞ்சம் இழுத்துப் பிடித்து வீச, இரண்டு பெரிய இந்திய விக்கெட்டுகள் விழுந்தது.

இதில் அவர் யாருடைய விக்கெட்டை எடுத்ததை பெரிதும் ரசித்தார்? என்ற கேள்விக்கு பதிலளித்த் அவர் “புதிய பந்தில் எங்களுடைய திட்டம் அதுவாகத்தான் இருந்தது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரது விக்கெட்டுமே மிகவும் முக்கியமான விக்கெட். ஒவ்வொரு பேட்டரும் எனக்கு ஒரே மாதிரிதான். ஆனால் நான் ரோகித் சர்மாவை வீழ்த்திய விதத்தை என்ஜாய் செய்கிறேன்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement