
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் கே எல் ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரேயாஸ் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். இதனால் இந்திய அணிக்குள் ரஜட் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார். கே எல் ராகுல் இந்த தொடரில் இல்லை என்பதால் அவருக்கு பதிலாக யார் களமிறங்குவார் என்பது குறித்து ரோஹித் சர்மா அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசி அவர், “இஷான் கிஷனுக்கு தான் நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு வழங்குகிறோம் என்றார்.மேலும் பேசிய அவர் இசான் கிஷன் பேட்டிங்கில் நடுவரசையில் விளையாடுவார். வங்கதேசத்துக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடிய நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை ஆட்டத்தில் நாங்கள் எதையும் அசாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
நாங்கள் சிறந்த 11 வீரர்களை வைத்து விளையாடுவோம்ம் எந்த வீரர்களை தேர்வு செய்வது என்பது குறித்து முடிவெடுப்பதில் நிச்சயம் சவால்கள் இருக்கும். நம்பர் எட்டு அல்லது ஒன்பதாவது இடத்தில் ஒரு ஆல்ரவுண்டர் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்த்து இருக்கிறோம்.அவர் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யும்போது அணிக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும். ஏனென்றால் நடுவரிசை விக்கெட்டுகள் விழுந்தால் அவர்கள் அணியை காப்பாற்றுவார்கள்.