
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தயாராகி வரும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், நியூசி. முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் மற்றும் இங்கிலாந்து ஜாம்பவான் இயான் பெல் ஆகியோர் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, “பொதுவாக இங்கிலாந்து ஓவல் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவால் தரக்கூடியது. நீங்கள் நன்றாக நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இங்கு ரன் சேர்க்க முடியும். இதற்கென்றே நீங்கள் அதிக நேரம் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் பவுலர்களை எதிர்கொள்ளும் நேரம் வரும்போது அந்த உள்ளுணர்வைப் பெறுவீர்கள்.