
Rohit Sharma Speaks About Working With "Fantastic" Rahul Dravid (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவருடன் இணைந்து செயல்பட ரோஹித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை நீக்கிவிட்டு தற்போது ரோஹித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட விருப்பம் தெரிவித்தும் அதனை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ இது போன்ற முடிவை எடுத்துள்ளது.
டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனி தனி கேப்டன் இருந்தால் தேவையின்றி பிரச்சினை ஏற்படும் என்பதால் கோலியை நீக்கியதாக பிசிசிஐ விளக்கமளித்தது. எனினும் அதனை ஏற்காத ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மற்றொரு புறம் டிராவிட் தான் கோலியின் பதவி நீக்கத்திற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.