Advertisement
Advertisement
Advertisement

தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிகாக அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் எம் எஸ் தோனியை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 5ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

Advertisement
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 04, 2024 • 08:10 PM

இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது துனித் வெல்லாலகே, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது பொறுப்பான ஃபினிஷிங்கின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்தாலும் 240 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 04, 2024 • 08:10 PM

இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன்பின் 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Trending

இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்துள்ள நட்சத்திர வீரர் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 7 ரன்களை கடந்த சமயத்தில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்நாள் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதன்படி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களைச் சேர்த்து, இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 5ஆம் இடத்தில் இருந்தார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில் தான் ரோஹித் சர்மா இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம், 264 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10, 831 ரன்களை குவித்து, இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த ஐந்தாவது வீரர் எனும் பெருமயைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில், 18,426 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் விராட் கோலி, சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement