
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி ரோஹித் சர்மாவின் தலைமையில் தீவிரமாக தயாராகிவருகிறது. அதற்காக, பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் பல வீரர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆடாததால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்தது. இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால், தனக்கான இடத்தை பிடிக்க மிகச்சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அபாரமாக விளையாடினார்.
முதல் டி20 போட்டியில் 28 பந்தில் 57* ரன்கள், 2ஆவது டி20 போட்டியில் 44 பந்தில் 74* ரன்கள், 3ஆவது டி20 போட்டியில் 45 பந்தில் 73* ரன்கள் என 3 டி20 போட்டிகளிலும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒரு போட்டியில் கூட அவுட் ஆகவில்லை. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவுட்டே ஆகாமல் 3 அரைசதம் அடித்து, தொடர் நாயகன் விருதையும் வென்றார்.