Advertisement

ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமணம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 09, 2021 • 15:18 PM
Royal Challengers Bangalore Appoint Sanjay Bangar As Head Coach
Royal Challengers Bangalore Appoint Sanjay Bangar As Head Coach (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. கடந்த 2016-ஆம் அண்டில் விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சைமன் கடிச், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகினார். இதனால் அணியின் இயக்குநராக உள்ள மைக் ஹெஸ்ஸன், அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். 

Trending


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர், ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக அவர் பணியாற்றினார். 

கடந்த 2014 முதல் 2019 வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் பணியாற்றியுள்ளார். அதன்பின் 2015-இல் பஞ்சாப் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 2016 வரை பணியாற்றினார். 
ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய் பங்கார், 2001 முதல் 2004 வரை இந்திய அணிக்காக 12 டெஸ்டுகள், 15 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

Also Read: T20 World Cup 2021

புதிய பயிற்சியாளருக்கு அடுத்ததாக புதிய கேப்டனையும் தேர்வு செய்யவேண்டிய நிலைமையில் ஆர்சிபி அணி உள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement