
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி இருந்த இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தல் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயமடைந்த ஜேக்கப் பெத்தெல், அத்தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். மேற்கொண்டு அவரின் காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்தும் விலகினார். இதனால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.