
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பு என்றாலே புதிய சர்ச்சை உருவாகிவிடுமே. இதனால் களத்தில் வேகப்பந்தவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வாரோ, அதே போல் செய்தியாளர்களின் கேள்வியையும் எதிர்கொண்டார்.அவர்
அதில் பேசிய அவர், “இந்திய அணியின் பிளேயிங் வெலன் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன் தான் முடிவு எடுக்கப்படும். ரஹானே ஒரு அனுபவ வீரர். தென்னாப்பிரிக்க தொடருக்காக சிறப்பாக பயிற்சி எடுத்து தயராகி உள்ளார். நானும் அவரின் பேட்டிங் குறித்து உரையாடினேன். ரஹானே இந்திய அணியின் ஒரு அங்கம். அவருக்கு துணை நிற்பேன்