Advertisement
Advertisement
Advertisement

SA vs ENG, 2nd ODI: பவுமா அசத்தல் சதம்; மீண்டும் மிரட்டிய மில்லர் - தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 29, 2023 • 22:06 PM
SA vs ENG, 2nd ODI: South Africa beat England by 5 wickets, take an unassailable 2-0 in the three-ma
SA vs ENG, 2nd ODI: South Africa beat England by 5 wickets, take an unassailable 2-0 in the three-ma (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. 

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், டேவிட் மாலன், பென் டக்கெட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Trending


தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 73 ரன்களை பார்ட்னர்ஷிப் முணையிலும் அமைத்தனர். அதன்பின் சதமடிபார் என எதிர்பார்க்கப்பட்ட ஹார் ப்ரூக் 4 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 80 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் பட்லருடன் இணைந்த மொயீன் அலியும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 250    ரன்களைத் தாண்டியது. பின் 51 ரன்களில் மொயீன் அலியும், 14 ரன்களில் கிறிஸ் வோக்ஸும், 28 ரன்களிலும் சாம் காரணும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஜோஸ் பட்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 சிக்சர், 8 பவுண்டரிகள் என 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக் - கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டி காக் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஸ்ஸி வெண்டர் டுசென் 38 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டெம்பா பவுமா அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். இது அவரது மூன்றாவது சர்வதேச ஒருநாள் சதமாகும். அதன்பின் அதிரடியாக விளையாடிய பவுமா 14 பவுண்டரி, ஒரு சிக்சர் என 109 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஹென்ரிச் கிளாசெனும் 27 ரன்களோடு வெளியேறினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - டேவிட் மில்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து, ஒரு ரன்னில் அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இருப்பினும் மறுமுனையில் டேவிட் மில்லர் அரைசதம் கடந்துடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரிகள் 58 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக விளையாடிய மார்கோ ஜான்சென் 32 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement