
ஆஃப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி 8 புள்ளிகளுடன், இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெறும் நோக்கில் உள்ளது. ஆனால், அந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்ற வலுவான இரண்டு அணிகளை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட உள்ள நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி அதற்கான திட்டமிடலில் இருந்த போது அந்த அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா, அதிரடியாக சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்தார். ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையே ஆன போட்டி மும்பையில் நடைபெறுவதால் இந்த சந்திப்பு எளிதாக அமைந்தது.
அஜய் ஜடேஜா, சச்சினுடன் ஒரே அணியில் ஆடியவர், அவரின் நண்பர் என்பதாலும், ஆப்கானிஸ்தான் அணியின் மீது இருக்கும் அன்பாலும் சச்சின் ஆப்கானிஸ்தான் வீரர்களை சந்திக்க நேரில் சென்றார். இதில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது.