
ஒரு உலகம் ஒரு கோப்பை என்ற பெயரில் ஓய்வு பெற்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் விளையாடிய சிறப்பு கண்காட்சி டி20 போட்டி இன்று நடைபெற்றது. கர்நாடகாவின் கிராம பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் பல ஆயிரம் பேருக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கு நிதி திரட்டும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இப்போட்டி நடைபெற்றது.
அதில் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரது தலைமையில் நிறைய ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் இருக்கும் சாய் கிருஷ்ணா கிரிக்கெட் மைதானத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஒரு உலகம் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஒரு குடும்பம் அணிக்கு இலங்கை வீரர் கழுவிர்த்தனா அதிரடியாக 22 ரன்களைச் சேர்த்து அவுட்டாக அடுத்ததாக வந்த இந்திய வீரர் முகமது கைப் 9 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய டேரன் மேடி 8 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்த போது சச்சின் டெண்டுல்கர் சுழலில் அவுட்டானார்.