
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் கள நடுவர்களின் தவறான முடிவுகளால் போட்டியின் முடிவே மாறிப்போகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் கடைசி ஓவரில் டெல்லி கேபிடள்ஸுக்கு 36 ரன்கள் தேவைப்பட, முதல் 3 பந்துகளையும் சிக்ஸர் அடித்து வெற்றிக்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருந்தார் ரோவ்மன் பவல். அப்படியான சூழலில் அந்த ஓவரின் 3ஆவது பந்துக்கு நோ பால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இடுப்புக்கு மேலே சென்ற அந்த பந்துக்கு நடுவர் நோ பால் கொடுக்கவில்லை. அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. நோ பால் கொடுக்கப்பட்டிருந்தால், ஒரு பந்து கூடுதலாக கிடைப்பதுடன், ஒரு ஃப்ரீஹிட் டெலிவரியும் கிடைத்திருக்கும். அதன்மூலம் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கும். ஆனால் நடுவர் நோ பால் கொடுக்காததால் டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.