Advertisement

ஸ்பின்னர்களை விளையாடுவதில் சர்ஃப்ராஸ் கான் சிறந்தவர் - சஞ்சய் மஞ்ரேக்கர்!

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பெறுவார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 14, 2024 • 19:33 PM
ஸ்பின்னர்களை விளையாடுவதில் சர்ஃப்ராஸ் கான் சிறந்தவர் - சஞ்சய் மஞ்ரேக்கர்!
ஸ்பின்னர்களை விளையாடுவதில் சர்ஃப்ராஸ் கான் சிறந்தவர் - சஞ்சய் மஞ்ரேக்கர்! (Image Source: Google)
Advertisement

மும்பை அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பிரபலமடைந்தவர் சர்ஃப்ராஸ் கான். இவர் இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். மேலும் இதுவரை 66 முதல்தர கிரிக்கெட்டில் போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கான் 14 சதம், 11 அரைசதங்கள் என 3,912 ரன்களைச் சேர்த்துள்ளார். 

மேலும் அவரது பேட்டிங் சராசரியானது 69.85ஆக உள்ளது. இதனால் இவர் இந்திய அணியின் பிராட்மேன் என்றும் அழைக்கப்பட்டார். இருப்பினும் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். அதன்பின் இந்திய ஏ அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட இவர் இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிராக 96, 04, 55 மற்றும் 161 ரன்களைக் குவித்து அசத்தினா. 

Trending


அதேசமயம் இந்திய அணியின் கேஎல் ராகுல் காயம் காரணமாக நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலக, அந்த இடத்திற்கு சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் முக்கிய வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிலும் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணியிலிருந்து விலகியுள்ளதால், மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சஃப்ராஸ் கான் இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது. தனது அறிமுக போட்டியில் விளையாடும் சர்ஃப்ராஸ் கான் மீதான் எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் சர்ஃப்ராஸ் கான் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அனுபவமற்ற அணி தான. ஆனால் இப்போட்டியில் என்னை பொறுத்தவரை இந்திய அணிக்கு தேவையானது சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடும் பேட்டர்கள் தான் என்று நினைக்கிறேன். அந்த இடத்தில் தான் சர்ஃப்ராஸ் கான் தனது சிறப்பான அறிமுக போட்டிக்காக காத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மேலும் ராஜத் பட்டிதார் இடம்பெற்று விளையாடினால் சர்ஃப்ராஸ் கானிற்கு நீங்கள் 5ஆம் இடத்தையே வழங்க வேண்டும்.

அப்போது தான் அணியின் நிலைத்தன்மை மாறாமல் இருக்கும். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடும் வகையில் ஒரு சிறப்பான பேட்டராக சர்ஃப்ராஸ் கான் இருப்பார் என தோன்றுகிறது. ஏனெனில் ஸ்பின்னர்களை விளையாடுவதில் சர்ஃப்ராஸ் கான் சிறந்தவர். அதேசமயம் இந்திய அணியில் ஏற்கெனவே யஷஸ்வி ஜெய்ஸ்வா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் போன்ற இடதுகை வீரர்கள் இருப்பதால், தேவ்தத் படிக்கல்லிற்கு வாய்ப்பு கிடைக்கும் என தோன்றவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement