Advertisement

ஆஸ்திரேலியாவைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

ஆஸ்திரேலிய அணியை போன்று இந்திய கிரிக்கெட் அணியும், சீனியர் வீரர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 22, 2023 • 14:21 PM
 'Selectors Could Look at Players Who Have it in Them to be Future Test Players': Sanjay Manjrekar
'Selectors Could Look at Players Who Have it in Them to be Future Test Players': Sanjay Manjrekar (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரமிங்கமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்துவிட்டு போட்டியின் முதல் நாளிலேயே டிக்ளேரும் செய்தது.

இதன்பின் தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு உஸ்மான் கவாஜா 141 ரன்களும், அலெக்ஸ் கேரி 60 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்பின் 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 273 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.

Trending


இதன் மூலம் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியின் கடுமையான போராட்டம், திட்டங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி 2 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான இந்த டெஸ்ட் போட்டி தான், கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என அனைவரும் நடப்பு ஆஷஸ் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆஸ்திரேலிய அணியை பார்த்தாவது இந்திய டெஸ்ட் அணியை வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து  பேசிய அவர், “ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வீரர்களான லபுசேன், கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாடுவது இல்லை. டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து விளையாடி வருகின்றனர், இதனால் தான் டெஸ்ட் போட்டிகளில் அவர்களால் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. 

குறிப்பாக அவர்கள் மீதான பனிச்சுமையும் இதன் மூலம் குறைவதால் அவர்களால் ஒவ்வொரு தொடருக்கும் நல்ல முறையில் தயாராக முடிகிறது. ஆஸ்திரேலிய அணியின் இந்த நடைமுறையை இந்திய அணியும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். சீனியர் வீரர்களை டி.20 போட்டிகளிலும் பயன்படுத்துவதை இந்திய அணி நிறுத்தி கொள்ள வேண்டும். இந்திய டெஸ்ட் அணியை வலுப்படுத்த வேண்டும் என்றால் டெஸ்ட் போட்டிகளுக்கான பிரத்யோக வீரர்களை தயார் செய்வதே ஒரே வழி” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement