
இந்திய அணி ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு ஷிகர் தவன் தான் கேப்டனாக இருப்பார் என பிசிசிஐ அறிவித்த நிலையில் தற்போது கேஎல் ராகுல் பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சியடைந்துவிட்டார் எனக் கூறி ராகுலை கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தவன் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார்.
நீண்ட நாட்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார் ஆகியோர் இத்தொடர் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளனர். இதனால், இவர்தான் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிக கவனம் பெற்றது வாஷிங்டன் சுந்தர்தான்.
வாஷிங்டன் சுந்தர் சமீபத்தில் இங்கிலாந்து கவுண்டி டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடினார். அத்தொடரில் சுந்தர் அபாரமாக பந்துவீசி விக்கெட்களை குவித்து நிலையில் பேட்டிங்கிலும் அவ்வபோது ஓரளவுக்கு பெரிய ஸ்கோர்களை அடித்து அசத்தினார். இதனால்தான், இவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது.