
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது. கேப்டன் பாபர் அசாம் கூட தொடர்ந்து ரன்கள் சேர்க்கவில்லை. பாகிஸ்தான அணி ஓரளவுக்கு வெற்றி பெறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் முஹம்மது ரிஸ்வான் தான்.
முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து ரன்களை தொடக்க வீரராக குவித்து வருகிறார். ஆனால் அதனை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால் முகமது ரிஸ்வானையே பலரும் விமர்சித்து வருகின்றனர். முஹம்மது ரிஸ்வான் உடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக பலரும் சாடி வருகின்றனர். இது நன்றாக விளையாடும் ஒரே வீரரையும் குறை சொல்லுகிறார்களே என்று மற்ற நாட்டு ரசிகர்கள் இடையே ஏற்படுத்துகிறது.
இது குறித்து பேசிய பாகிஸ்தானியின் முன்னாள் ஜாம்பவான் சாஹித் அப்ரிடி, “நீங்கள் பந்து வீச்சோ இல்லை பேட்டிங்கோ நல்ல தொடக்கம் மிகவும் முக்கியம். ரிஸ்வான் மற்றும் பாபர் இரண்டு பேருமே உங்களுக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறார்கள். ஆனால் இரண்டு பேரை வைத்து ஒரு அணியை உருவாக்க முடியாது .11 பேரும் விளையாட வேண்டும். 6 பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கிறார்கள்.