
வரும் அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி அதற்குமுன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 23, 25 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. 20ஆம் தேதி நடைபெறும் போட்டி மொஹாலியிலும், அடுத்த இரண்டு போட்டிகளும் நாக்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் நடக்கவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் அனைவரும் நேற்று இரவு மொஹாலிக்கு சென்றடைந்தனர். அப்போது அங்கு அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதில் முகமது ஷமிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட உடன் அவர் தனிமைப்படுப்பட்டார். இவருடன் மற்ற வீரர்கள் தொடர்பில் இல்லையென்பதால், மற்ற வீரர்களுக்கு தொற்று பரவியிருக்காது என்பது உறுதியாகியுள்ளது.