Advertisement
Advertisement
Advertisement

முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை - ஷான் மசூத்!

சமீபகாலமாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாட தவறிவருகிறோம் என இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.

Advertisement
முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை - ஷான் மசூத்!
முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை - ஷான் மசூத்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 12, 2024 • 10:12 AM

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன், ஷபீக் 102 ரன்களைச் சேர்த்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 12, 2024 • 10:12 AM

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியானது ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட்டின் அபாரமான ஆட்டத்தின் மூலம் 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 317 ரன்களையும், ஜோ ரூட் 262 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனையடுத்து 7ஆவது விக்கெட்டுக்கு ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஜோடி தாக்குப் பிடித்து விளையாடினர்.

Trending

இதனால் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆகா சல்மான் 41 ரன்னுடனும், ஆமீர் ஜமால் 27 ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர். பின்னர் 63 ரன்கள் எடுத்த நிலையில் சல்மான் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, என அடுத்தடுத்டு வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத், “சொந்த மண்ணில் மீண்டும் தோல்வியுற்றது வருத்தமளிக்கிறது. கடினமான உண்மை என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த அணி வெற்றிபெற அதற்கான வழிகளைத் தேடும். எங்களது அணி மனதளவில் பலவீனமானதாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்த ஆடுகளம் 3 நாள்களுக்குப் பிறகு எங்கள்ளுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். அதனால் தான் நாங்கள் 3ஆம் நாளை அவ்வளவு நீட்டித்து விளையாடினோம். ஆனால், எப்படியாகினும் இறுதியாக நாங்கள் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழிகளை கண்டறிந்திருக்க வேண்டும்.

Also Read: Funding To Save Test Cricket

சமீபகாலமாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாட தவறிவருகிறோம். ஆடுகளம் இரண்டு பக்கமும் சமமாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தால் 3,4ஆவது நாளில் சாதகமாக இருந்திருக்கும். 2022க்கு பிறகு தற்போதுதான் முல்தானில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஆடுகளத்தை மேம்படுத்தும் நபர்களுடம் பேச எங்களுக்கு போதியளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியாக எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு தகவமைக்க தயாராக இருக்க வேண்டும். முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் அணி எதையுமே கற்றுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறது” என்று தெரிவித்துள்ளர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement