
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்காப்பட்ட ரோஹித் சர்மா தனது இரண்டாவது குழந்தை பிறப்பு காரணமாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு செல்லவில்லை. மேலும் அவர் இன்னும் சில தினங்கள் தாது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிவுசெய்ததன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாக இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார்.
மேற்கொண்டு ஷுப்மன் கில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுவதால், அவரது இடத்தில் தேவ்தத் படிக்கல்லும், அணியின் தொடக்க வீரராக கேஎல் ராகுலும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளடு. இந்நிலையில், இத்தொடரில் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்ட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.