Advertisement
Advertisement
Advertisement

அணிக்காக மேட்ச் வின்னராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு - ஷர்துல் தாக்கூர்!

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது பெயரும் இடம்பெறும் என நம்பியதாக இளம் லெஜண்ட் வீரர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
Shardul Thakur: Wants To Give More Depth To Indian Batting
Shardul Thakur: Wants To Give More Depth To Indian Batting (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 09, 2022 • 02:02 PM

டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெறவுள்ளது. 16 முதல் 22ஆம் தேதிவரை தகுதிச் சுற்று ஆட்டங்களும், 23ஆம் தேதி முதல் பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 09, 2022 • 02:02 PM

இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றது. அணியில் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சு துறைதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அணியின் முக்கிய பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளதால், அவருக்கு சரியான மாற்று வீரர் இல்லாமல்தான் ஆஸிக்கு இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளது. 

Trending

பும்ராவுக்கு மாற்றாக ஷமி இரண்டு நாட்களில் ஆஸிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்தூல் தாகூர், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது பெயரும் இடம்பெறாதது தனக்கு அதிருப்தியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார். 

அதில், ‘‘டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது நிச்சயமாக மிகப்பெரிய ஏமாற்றம்தான். உலகக் கோப்பையின் பங்கேற்று மேட்ச் வின்னராக இருக்க வேண்டும் என்பதுதான் அனைத்து வீரர்களின் கனவாக இருக்கும். என்னை தேர்வு செய்யவில்லை. இருப்பினும், அதற்காக நான் சோர்ந்துபோக மாட்டேன். என்னிடம் முழு ஆற்றலும் இருக்கிறது. 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் இடம்பிடிப்பதற்காக நிச்சயம் இனி வரும் போட்டிகளில் தீவிரமாக செயல்படுவேன். அணிக்காக மேட்ச் வின்னராக இருக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அனைத்து போட்டிகளிலும் இதே மனநிலையுடன்தான் களமிறங்கி வருகிறேன்” எனக் கூறினார்.

ஷர்தூல் தாகூர் இந்திய அணிக்காக இக்கட்டான நிலையில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்திக் கொடுக்க கூடியவர். இதனால்தான், இவரை எல்லோரும் ’லார்ட், லெஜண்ட்’ என அழைத்து வருகிறார்கள்.

இவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசி அசத்தியிருந்தார். பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடக் கூடியவர்தான். இனி வரும் இரண்டு போட்டிகளிலும் இவர் அபாரமாக செயல்பட்டால், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அணியில் இணைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஆம், தீபக் சஹார் தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இவரது காயம் விரைவில் குணமடையவில்லை என்றால், நிச்சயம் மாற்று வீரரை அனுப்பியாக வேண்டும். தற்போதுள்ள தென்னாப்பிரிக்க தொடரில் ஷர்தூல் தாகூர்தான் முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். இதனால், அவரை அனுப்பிவைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement