Advertisement
Advertisement
Advertisement

எனது கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ஷஷாங்க் சிங்!

பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் எனது ஷாட்டை தேர்வு செய்து விளையாடினே என குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement
எனது கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ஷஷாங்க் சிங்!
எனது கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ஷஷாங்க் சிங்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 05, 2024 • 01:12 PM

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்  இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 89 ரன்களைச் சேர்த்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 05, 2024 • 01:12 PM

அதன் பிறகு விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்து  வெற்றி பெற்றது. குறிப்பாக இப்போட்டியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சிக்கந்தர் ரஸா போன்ற அதிரடி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர்.

Trending

அதிலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ஷஷாங்க் சிங், இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை நான் விளையாட வேண்டும் என பலமுறை கனவு கண்டுள்ளேன். அந்த கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,  “இந்த வெற்றியை இன்னும் முழுமையாக ஏற்க முடியவில்லை. இதுபோன்ற ஒரு இன்னிங்ஸை நான் விளையாட வேண்டும் என பலமுறை கனவு கண்டுள்ளேன். அந்த கனவு நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சாதாரண கிரிக்கெட் ஷாட்களை விளையாடுவதே எனது பலம். வழக்கமாக நான் நம்பர் 7இல் தான் பேட்டிங் செய்து வந்தேன். ஆனால் இன்று ஐந்தாம் இடத்தில் களமிறங்கி விளையாடினேன்.

இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்களுக்கு பவுன்ஸ் நன்றாக இருந்தது. அதேபோல் இரு அணிகளாலும் 200 ரன்களை சேர்க்க முடிந்ததன் மூலமாக பிட்ச் எப்படி உள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இப்போட்டியில் பல ஜாம்பவான்கள் பந்துவீசினர், ஆனால் நான் அவர்களின் பெயரை பார்க்கவில்லை, அவர்களது பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் எனது ஷாட்டை தேர்வு செய்து விளையாடினேன். 

கடந்த சில ஐபிஎல் சீசன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது எனக்கு பெரிதளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கான வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். அவர்களின் இந்த ஆதரவின் காரணமாக என்னால் முழு உறுதியுடன் போட்டிகளை எதிர்கொள்ள முடிகிறது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement