
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி துணை கேப்டன் ஷிகர் தவான் சக வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியில் நடைபெற்று வரும் மாற்றம் சிறப்பாக அமைந்திருக்கிறது. சீனியர்களுக்கு பதிலாக களமிறங்கும் இளம் வீரர்களுக்கு ஜிம்பாப்வே தொடர் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரர்கள் விளையாடுவதால் சர்வதேச போட்டியில் அவர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லாமல் முழு உத்வேகத்துடன் விளையாடுகிறார்கள்.