
Shreyas Iyer Ruled Out Of Royal London Cup In England (Image Source: Google)
இந்திய அணியின் அதிரடி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த இங்கிலாந்து அணியுடனான தொடரின் போது காயமடைந்து அறுவைசிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இதனால் நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவர் முழு உடற்தகுதியுடன் இல்லாததால், இலங்கை அணிக்கெதிரான தொடரிலும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.