
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. கடைசியாக நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பாக முதல் விக்கெட்டிற்கு 63 ரன்களை சேர்த்த நிலையில் ராகுல் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் அணியின் ஸ்கோர் 84 ரன்களாக இருந்தபோது 40 ரன்கள் எடுத்த நிலையில் தவானும் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை விளையாடினார்.
ஒரு கட்டத்தில் இஷான் கிஷனும் 50 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில் ஷுப்மன் கில் மட்டும் தனியாக ஒருபுறம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஆவது ஓவரின் முதல் பந்தில் 97 பந்துகளை சந்தித்த நிலையில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 130 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களை குவித்தது.