Advertisement

ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!

கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக ஷுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனையாக சமாரி அத்தபத்துவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.   

Bharathi Kannan
By Bharathi Kannan October 13, 2023 • 18:44 PM
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு!
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு! (Image Source: Google)
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐசிசி அறிவித்து இருந்தது.

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய வீரர்களான ஷுப்மன் கில் ,முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Trending


அதில் சிராஜ் மற்றும் மலானை பின்னுக்கு தள்ளி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதின் விளையாவ ஷுப்மன் கில் செப்டம்பர் மாதம் மட்டும் 80 சராசரியுடன் 480 ரன்கள் எடுத்துள்ளார்.

அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளான லாரா வோல்வார்ட் மற்றும் நாடின் டி கிளர்க்கும், இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்தும் இடம் பெற்றிருந்தனர். இதில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement