
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன . 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் தோல்வியடைந்தது .
இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்தியா . இந்த முறை நிச்சயமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சிகர்களிடமும் இருந்து வருகிறது . ஆனால் ஆஸ்திரேலியா அணியும் பலம் வாய்ந்ததாக உள்ளது . அந்த அணியின் மிச்சல் ஸ்டார்க் ஜோஸ் ஹேசல்வுட் போலான்ட் போன்ற திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர் .
இங்கிலாந்து மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கே உதவும் வகையில் இருக்கும் என்பதால் இது ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு சாதகமானதாகவே கருதப்படுகிறது . இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை கடந்த டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி, ஷுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடினர் . அஜிங்கிய ரஹானே மீண்டும் அணியில் இடம் பெற்று இருப்பது இந்திய அணியின் பேட்டிங்கிற்கு பலம் சேர்க்கக் கூடியதாக இருக்கிறது .