Advertisement
Advertisement
Advertisement

துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!

எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விடுவிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்!
துலீப் கோப்பை 2024: முதல் சுற்றில் இருந்து முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ரவீந்திர ஜடேஜா விலகல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 27, 2024 • 05:56 PM

இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 27, 2024 • 05:56 PM

மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் டீம் ஏ அணியின் கேப்டனாக ஷுப்மன் கில்லும், டீம் பி அணியின் கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரும், டீம் சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும், டீம் டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்ம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Trending

மேற்கொண்டு இந்த அணிகளில் இந்திய அணியைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் ஆஸ்வின் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் சுற்று போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை விடுவிப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் உடல்நல குறைவு காரணமாக துலீப் கோப்பை தொடரில் முதல் சுற்று போட்டிகளில் விளையாடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து முகமது சிராஜிக்கு மாற்றாக நவ்தீப் சைனியும், உம்ரான் மாலிக் மாற்றாக கௌரவ் யாதவும் சேர்க்கப்ப்ட்டுள்ளனர். அதேசமயம் ரவீந்திர ஜடேஜாவிற்கு மாற்றாக எந்த வீரரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. மேற்கொண்டு குடலிறக்க அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும், நிதிஷ் குமார் ரெட்டி தனது உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் அவர் துலீப் கோப்பை அணியில் சேர்க்கப்படுவார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

துலீக் கோப்பை தொடருக்கான அணிகள்

அணி ஏ: ஷுப்மான் கில் (கே), மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், திலக் வர்மா, ஷிவம் துபே, தனுஷ் கோட்டியன், குல்தீப் யாதவ்,ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, அவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷாஸ்வத் ராவத்.

அணி பி: அபிமன்யு ஈஸ்வரன் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், முஷீர் கான், நிதிஷ் குமார் ரெட்டி (உடற்தகுதி), வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, யாஷ் தயாள், முகேஷ் குமார், ராகுல் சாஹர், ஆர் சாய் கிஷோர், மோஹித் அவஸ்தி, என். ஜெகதீசன்.

அணி சி: ருதுராஜ் கெய்க்வாட் (கே), சாய் சுதர்ஷன், ராஜத் படிதார், அபிஷேக் போரல், சூர்யகுமார் யாதவ், பாபா இந்திரஜித், ஹிருத்திக் ஷோக்கீன், மானவ் சுதர், கௌரவ் யாதவ், வைஷாக் விஜய்குமார், அன்ஷுல் கம்போஜ், ஹிமான்ஷு சவுகான், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜூயல், சந்தீப் வாரியர்.

Also Read: Funding To Save Test Cricket

அணி டி: ஸ்ரேயாஸ் ஐயர் (கே), அதர்வா டைடே, யாஷ் துபே, தேவ்தத் பாடிக்கல், இஷான் கிஷன், ரிக்கி புய், சரண்ஷ் ஜெயின், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், ஆதித்யா தாகரே, ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, கேஎஸ் பாரத், சவுரப் குமார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement