
இந்திய அணியின் நட்சத்திர வீரராக வளர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட வல்ல வீரர் என்பதால் இந்தியாவின் 360 என அழைக்கப்படுகிறார் சூர்யகுமார் யாதவ். மிகச்சிறந்த திறமைசாலியான இவர், செம ஃபார்மில் அபாரமாக பேட்டிங் செய்துவருகிறார். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வீரராக திகழ்வார்.
இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால் சூர்யகுமார் யாதவ் நன்றாக ஆடவேண்டும். அந்தளவிற்கு முக்கியமான வீரராக வளர்ந்துள்ளார். அண்மைக்காலமாக செம ஃபார்மில் அபாரமாக பேட்டிங் செய்துவரும் விராட் கோலி, இங்கிலாந்தில் டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். ஆசிய கோப்பையில் அபாரமாக பேட்டிங் ஆடினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
மூன்றாம் வரிசையில் இறங்கும் சீனியர் வீரர் விராட் கோலியுடனான சூர்யகுமார் யாதவின் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு நம்பிக்கையளிக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, கோலி - சூர்யகுமார் யாதவ் இடையேயான 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 69 ரன்களையும், கோலி 48 பந்தில் 63 ரன்களையும் குவித்தனர். அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.