
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது இன்று பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடர் முதல் இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரும் செயல்படவுள்ளதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. அதேசமயம் இலங்கை அணியிலும் வநிந்து ஹசரங்கா கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, புதிய கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது தலைமையில் இலங்கை அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனக்கும் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் இடையே உள்ள பிணைப்பு குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் பந்தம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை சரியாக 10 வருடங்கள் ஆகின்றன. இடையில் நான் மற்றொரு அணியிலும், அவர் மற்றொரு அணியிலும் சேர்ந்தார்.