
SL vs SA, 1st ODI: Fernando scored a century; 301-run target for South Africa! (Image Source: Google)
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களான மினோத் பானுகா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. இதில் பானுகா 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஜபக்ஷ ரன் ஏதுமின்றி வெளியேறி ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஃபெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்செய டி சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.