அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்து படுதோல்விகளைச் சந்தித்ததுடன் லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இதனையடுத்து அணியின் ஆலோசகர் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னே மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஆகியோர் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதன் காரணமாக இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுத்திருந்தது.
அவரது தலைமையின் கீழ் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி இழந்த போதும், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அதன்பின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய இலங்கை அணி தொடரை இழந்த போதும் கடைசி போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை ஒரு நாள் தொடரிலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியை டெஸ்ட் தொடரிலும் வென்றிருந்தது.