
India Women vs Australia Women 3rd ODI: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் சதமடித்த நிலையிலும், இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வ்ருகிறது. தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய மகளிர் அணியும் வெற்றி பெற்ற தொடரை சமன் செய்தன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஹீலி 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் அரைசதம் கடந்து அசத்திய ஜார்ஜியா வோல் சதத்தை நெருங்கிய நிலையில் 81 ரன்களுக்கும், மறுபக்கம் எல்லிஸ் பெர்ரி 68 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.