
Sneh marks Test debut in style, fulfills late father's dream (Image Source: Google)
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்டாலில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹீத்தர் நைட் 95 ரன்களையும், டாமி பியூமண்ட் 66 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீராங்கனையாக களமிறங்கிய ஸ்நே ராணா அசத்தலாக பந்து வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டிக்கு பின் பேசிய ராணா,“இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் என் தந்தையை இழந்தேன். அதுவும் இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு தான் இது நடந்தது. நான் களத்தில் இறங்கிய போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.