Advertisement

தீப்தி சர்மா ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஸ்நே ரானா - காணொளி!

யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணி வீராங்கனை ஸ்நே ரானா அதிரடியாக விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
தீப்தி சர்மா ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஸ்நே ரானா - காணொளி!
தீப்தி சர்மா ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஸ்நே ரானா - காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 09, 2025 • 10:10 AM

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைக் குவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 09, 2025 • 10:10 AM

அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜியா வோல் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 99 ரன்களைக் குவித்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். அவரைத் தவிர்த்து கிரண் நவ்கிரே 46 ரன்களையும், கிரேஸ் ஹேரிஸ் 39 ரன்களையும் குவித்தனர். ஆர்சிபி தரப்பில் ஜார்ஜியா வெர்ஹாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.

Trending

அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெர்ரி போன்ற நட்சத்திர வீராங்கனைகள் சோபிக்க தவறிய நிலையில், அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 69 ரன்களையும், ஸ்நே ரானா 26 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களில் ஆல் அவுட்டானது. யுபி வாரியர்ஸ் தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன், கேப்டன் தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்மூலம் யுபி வாரியர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஜார்ஜியா வோல் ஆட்டநாயகி விருதை வென்றார். 

இப்போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், அந்த அணி வீராங்கனை ஸ்நே ரானா இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களின் பாரட்டுகளை பெற்று வருகிறது. அதன்படி ஆர்சிபி அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிபெற 43 ரன்கள் தேவை என்ற நிலையில், யுபி வாரியர்ஸ் தரப்பில் 19ஆவது ஓவரை கேப்டன் தீப்தி சர்மா வீசினார். 

Also Read: Funding To Save Test Cricket

அப்போது அந்த ஓவரை எதிர்கொண்ட ஸ்நே ரானா இரண்டாவது பந்தை பவுண்டரி விளாசிய நிலையில், அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அசத்தினார். அதன்பின் 4ஆவது பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் சிக்ஸரையும் விளாசி மொத்தமாக அந்த ஓவரி 28 ரன்களைச் சேர்த்தார். பின் 26 ரன்கள் எடுத்த நிலையில் அதே ஓவரின் கடைசி பந்தில் ஸ்நே ரானா தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் ஸ்நே ரானா அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement