Advertisement

சிலர் இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர் - கௌதம் கம்பீர் சாடல்!

25 ஆண்டுகளாக வர்ணனையாளராக இருக்கும் சிலர், இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சாடியுள்ளார்.

Advertisement
சிலர் இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர் - கௌதம் கம்பீர் சாடல்!
சிலர் இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர் - கௌதம் கம்பீர் சாடல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2025 • 08:54 PM

இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன்மூலம் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகவும் இது அமைந்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2025 • 08:54 PM

அதற்கு முன் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது, நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது என அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்தது. 

ஆனால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியையும் கொடுத்திருந்தனர். அனாலும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனத்தை சில வர்ணனையாளர் விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இந்நிலையில் தான் தன்னை விமர்சித்தா வர்ணனையாளர்களை கடுமையாக சாடிய கம்பீர், இந்திய கிரிக்கெட்டை அவர்களின் தனிப்பட்ட சொத்தாக நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய கௌதம் கம்பீர், “நான் இந்தப் பணியை ஏற்றுக்கொண்டபோது, ​​எப்போதும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அது எதிர்பார்த்த வழியில்தான் இருந்தது, இந்திய அணியின் செயல்திறனைப் பார்த்து நீங்கள் ஒவ்வொரு நாளும் மதிப்பிடப்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எப்போதும் விமர்சனங்களும் இருக்கும், பாராட்டுகளும் இருக்கும். எப்போதும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், அதை நான் நன்கு அறிந்திருந்தேன்.

அது மாறவில்லை, நான் அதில் முற்றிலும் மகிழ்ச்சியடைகிறேன், ஏனென்றால் எனது வேலை அனைத்து வீரர்களுடனும் சேர்ந்து நாட்டைப் பெருமைப்படுத்துவதாகும், அது எனது பயிற்சி வாழ்க்கையின் கடைசி நாள் வரை நீடிக்கும். நான் இந்தப் பொறுப்பை ஏற்று எட்டு மாதங்கள் ஆகின்றன, முடிவுகள் நமக்கு சாதகமாக இல்லாவிட்டால், விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், 25 ஆண்டுகளாக வர்ணனையாளராக இருக்கும் சிலர், இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர்.

Also Read: LIVE Cricket Score

இது அவர்களுடைய சொந்த அணி ஒன்றும் கிடையாது, நாட்டு மக்களுக்குச் சொந்தமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் என்னுடைய பயிற்சி, சாதனைகள் மற்றும் என்னுடைய சாம்பியன்ஸ் கோப்பை பரிசுத் தொகை குறித்தும் அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். நான் என் பணத்தை எங்கே செலவிட்டேன் என்று நான் சொல்லத் தேவையில்லை, நான் இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன், என் கடைசி மூச்சு வரை அப்படியே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement