
இன்று இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இது இந்திய அணிக்கு நான்காவது போட்டியில் நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருக்கிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்தது.
பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வங்கதேச அணியை கட்டுப்படுத்தினார்கள். இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 48 சுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இறுதிவரை களத்தில் நின்ற விராட் கோலி வெற்றியை உறுதி செய்து 103 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் இந்திய அணி 41.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டிக்கு காரணமாக இருந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.