
Sourav Ganguly reacts to Virat Kohli's explosive statements (Image Source: Google)
இந்திய அணியில் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே விரிசல் இருந்ததாக கருதப்பட்ட நிலையில், தற்போது அது கங்குலிக்கும், கோலிக்கும் இடையே பிரச்சினையாக மாறிவிட்டது.
இதற்கு முக்கிய காரணம், கங்குலியின் பேட்டியும், விராட் கோலியின் விளக்கமும் தான். தற்போது இந்த விவகாரம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது, தாம் வேண்டாம் என்ற தடுத்ததாகவும், ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி20க்கு ஒரு கேப்டன் என்று இரண்டு பேர் இருக்க முடியாது என்பதால் தாங்களே கேப்டன் பதவியில் தொடர வேண்டும் என்று அவரிடம் கூறியதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.