
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி வீரர் சௌரவ் கங்குலி. கடந்த 2019 ஆம் ஆண்டில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். அந்த ஆண்டுக்கு முன்னதாக ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ பதவிக்காலம் முடிந்த நிலையில், பிசிசிஐ-யின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கங்குலி தற்போது ஐஎபில் பக்கம் திரும்பியுள்ளார். அதாவது மீண்டும் டெல்லி அணியின் இயக்குநராக அவர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக கங்குலி பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கங்குலியுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பணியாற்றியபோது அவர் அணிக்கு தேவையான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.