Advertisement

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு; இரு நட்சத்திர வீரர்கள் விலகல்!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன்ரிச் நோர்ட்ஜே, சிசாண்டா மகாலா ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan September 21, 2023 • 14:33 PM
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு; இரு நட்சத்திர வீரர்கள் விலகல்!
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு; இரு நட்சத்திர வீரர்கள் விலகல்! (Image Source: Google)
Advertisement

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு வெகு சில நாட்களை இருக்கும் நிலையில், வீரர்களின் காயம் சில அணிகளுக்கு பெரிய பின்னடைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி பெரிதும் நம்பி இருந்த தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் விரல் உடைந்து வெளியேறினார்.

எப்பொழுதுமே உலகக் கோப்பைத் தொடர் நெருங்கும் பொழுது இப்படியான திடீர் காயங்களால் கிரிக்கெட் ரசிகர்கள் சில அபாயகரமான நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை தவறவிடுவார்கள். இது உலகக்கோப்பையின் சுவாரசியத்தை குறைப்பதாகவே அமையும். இது ஒருபுறம் இருக்க உலகக் கோப்பை தொடர் என்றாலே தென் ஆப்பிரிக்க அணிக்கு துரதிஷ்டம் தொடர்ந்து வரக்கூடிய ஒரு விஷயமாகவே இதுவரையில் வந்திருக்கிறது. 

Trending


உலகக் கோப்பை தொடரில் அந்த அணி போல் பாதிக்கப்பட்ட ஒரு அணி எதுவுமே கிடையாது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில், நெதர்லாந்து அணியிடம் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு வாய்ப்பு என்கின்ற நிலையில், அந்த அணியிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை இழந்து, பாகிஸ்தான் அணிக்கு கொடுத்தது தென் ஆப்பிரிக்கா. 

இதன் மூலம் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை மீண்டும் கெடுத்துக் கொண்டது. இந்த நிலையில் இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை துவங்க இருக்கும் நிலையில், அந்த அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்ட்ஜே காயமடைந்து வெளியேறி இருக்கிறார். 

அதேபோல சமீப காலத்தில் வேகப்பந்து வீட்டில் மிக புத்திசாலித்தனமாக செயல்பட்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட சிசண்ட மகலே காயத்தால் வெளியேறியிருக்கிறார். இந்த இடத்தில் லிசார்ட் வில்லியம்ஸ் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ராப் வால்டர், “இவர்கள் இரண்டு பேரும் உலககோப்பைக்கு கிடைக்காமல் போவது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இவர்கள் எங்கள் அணிக்கு நல்ல பலத்தை கொடுக்கக் கூடிய மகத்தான வீரர்கள். இவர்களுக்காக அனுதாபப்படும் அதே வேளையில் இவர்கள் மீண்டு வருவதற்கான எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement