
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பறி அசத்தியது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றினாலும் கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது உலகக் கோப்பை தகுதிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியது.
இது போதாதென்று ஓவர்களை குறித்த நேரத்தில் வீசாததால் உலகக்கோப்பை சூப்பர் லீக் பாயிண்ட்களில் ஒரு புள்ளியையும் இழக்க நேரிட்டது. குறித்த நேரத்தில் பந்து வீச வேண்டிய கட்டாய ஓவர்களில் ஒரு ஓவர் குறைவாக வீசினர். இதையடுத்து முன்னர் 79 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா ஒரு புள்ளியை இழந்து தற்போது 78 புள்ளிகளுடன் உள்ளது.
உலகக் கோப்பை புதிய தகுதி விதிகளின் படி சூப்பர் லீக் புள்ளிகளின் அடிப்படையில் டாப் 8 அணிகள் இயல்பாகவே தகுதி பெறும். மீதமுள்ள 2 இடங்களுக்கு ஐசிசி சூப்பர் லீகில் உள்ள 5 அணிகள், அசோசியேட் அணிகள் ஐந்துடன் தகுதிச் சுற்றில் மோத வேண்டும். இப்போதைக்கு இந்தியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 7 அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டன. 8ஆவது நிலையில் 88 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா 78 புள்ளிகள், இலங்கை 77 புள்ளிகள், அயர்லாந்து 68 புள்ளிகள்.