
இந்திய அணிக்காக குறைந்த போட்டிகளிலேயே விளையாடி இருந்தாலும், சஞ்சு சாம்சனுக்காக கவலைப்படாத கிரிக்கெட் வீரர்களே இல்லை என்று சொல்லலாம். இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றாலும், ஐபிஎல் தொடர் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் சஞ்சு சாம்சன். சென்னை, கேரளா, ராஜஸ்தான், டெல்லி, பெங்களூரு என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சிறிய வயதிலேயே ஐபிஎல் விளையாடியதன் விளைவால், இளம் வயதிலேயே ராஜஸ்தான் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலம் விளையாடினால், ஐபிஎல் தொடரில் ஏராளமான சாதனைகளை படைப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் எப்படி கொண்டு வரப்பட்டார் என்ற விவரத்தை ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தம், “நானும் சஞ்சு சாம்சனும் ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 19 வயதில் சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட்டிடம் அழைத்து சென்றேன். அப்போது ராகுல் டிராவிட்டிடம், உள்ளூர் கிரிக்கெட்டில் என் பந்துவீச்சில் 6 சிக்சர்களை விளாசிய வீரர் இவர் தான் என்று சஞ்சு சாம்சனை அறிமுகம் செய்தேன்.